Tuesday 20 May 2008

"என்ன உன் synapse ல update இல்ல??" இப்டி கேட்டு என்னை புளங்காகிதம் அடைய வெச்ச பத்மா, சுபாஷினி, கவிதா இவங்க மூணு பேருக்கும் இந்த பதிவு நன்றியுடன் dedicate செய்ய படுகிறது.
அது என்னன்னா இதுக்கு அப்பாவும் புள்ளை யும் தான் காரணம்.
காலை நேரத்துல நான் கம்ப்யூட்டர் ல உக்காந்தா புள்ளைக்கு புடிக்கலை... இருக்குற பத்து பல்லை வெச்சு நல்லா கடிச்சு விட்டுடுறான். ஆ ஊ னு கத்தி கலாட்டா பண்ணுறான்.....தலைய எதுலயாச்சும் மோதிக்கிட்டு அழுவுறான்....எப்போவும் அவன் கூடவே வெளாடனுமாம். IPL ஆரம்பிச்சதுலேர்ந்து சாயுங்காலம் அப்பா ஆபீஸ் ல இருந்து வந்தோன shoes கூட கழட்டாம மேட்ச் பாக்க உக்காந்துடுராரு. புள்ளை மதியானம் தூங்குறப்போ நான் துணி மடித்தல், கீரை ஆய்தல்,இல்லன்னா தூங்குதல் முதலான வேலைகளில் busyya இருக்குறேன். அதுனால synapse ல நெறையா posts இன்னும் drafts stage ல இருக்கு. ஆனா முக்யமான மூணு பேரு கேட்டதுனால அவசரமாஒரு வெட்டி போஸ்ட்.

IPL ல MI டீம் ல சச்சின் இருக்கதுனால எங்க ஆளு MI டீம் க்கு சப்போர்ட். நான் ஊரு மேல உள்ள பாசத்துல கொஞ்சம், Dhoni இருக்கதுனால நெறைய, CSK க்கு சப்போர்ட். சிந்து பைரவி படத்துல சிவகுமார் சங்கீதம் பத்தி பேசினா, சுலக்ஷ்னா மாடில வடாம் காயுது, கொல்ல பக்கம் துணி காயுது னு யோசிச்சுட்டு இருப்பாங்களே ...அந்த மாதிரி போன சண்டே lund club க்கும், copenhagen club க்கும் நடந்த கிரிக்கெட் மேட்ச் ல எங்க ஆளு நாப்பத்து ஏழு runs, ஒரு விக்கெட் எடுத்து man of the match.....ஆனா எனக்கு கிரிக்கெட் ல இருக்குற நுணுக்கங்கள் அவ்ளோ ஏன் நெறைய players பேரு கூட செரியா தெரியாது...இருந்தாலும் ஏதோ IPL னு ஒன்னு நடக்குது எல்லாரும் பாக்குறாங்க, so நம்மளும் ஒரு டீம் கு சப்போர்ட் பண்ணலாம் னு பண்ணிட்டு இருக்கேன்.

போன wednesday, CSK vs MI match ல Dhoni win பண்ணனும் னு pray பண்ணேன். அது ஊத்திகிச்சு .....அதும் பெரிய அளவுல ஊத்திகுச்சு... எங்க ஆளோட friend ஒருத்தர், அவரும் CSK க்கு சப்போர்ட்....அவர் சொல்லுறாரு...'குருவி படத்த விட பெரிய ஊத்தல்' னு......சுபாஷினி கூட சொன்னா...குருவி சகிக்கலை, காக்கா மாறி இருக்குன்னு.....நான் இன்னும் பாக்கலை... நான் நேபாளி பாத்தேன். recent ஆ பாத்த படங்கள் ல எனக்கு இந்த படம் பிடிச்சுது......ஆனா violence overdose. அப்றோம் 'அறை எண் முன்னூத்தி அஞ்சில் கடவுள்´' பாத்தேன். இந்த டைரக்டர் சிம்பு தேவனோட முதல் படம் 'இம்சை அரசன்' விட எனக்கு இந்த படம் பெட்டேர் னு தோணிச்சு...நெறைய பேருக்கு இம்சை அரசன் ரொம்ப பிடிக்கும், ஆனா எனக்கு என்னமோ அந்த படத்துல வர்ற அக்கா மாலா, கப்சி, இந்த ஜோக் லம் சகிக்கலை......அது செம மொக்கை படம் னு எனக்கு தோணும். அர்ஜுன் அப்பா கிட்ட இம்சை அரசன் விட 'அறை எண்' better னு சொன்னா, படம் ஒண்ணும் பெரிசா ஓடலையே?? னு சொன்னாரு. ஆனா படத்துக்கு ரொம்ப செலவு பண்ண மாறி தெரியலை....போட்ட காசு க்கு மேல கண்டிப்பா தேத்தி இருப்பாங்கன்னு நெனைக்கிறேன். அவர் ஒரு வடிவேலு fan. எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப stressed ஆ தோணுற சமயத்துல nice ஆ 'இம்சை அரசன் போட்டு பாக்கலாமா ?' னு bit ஐ போடுவாரு. 'அய்யா சாமி ஆளை விடுங்க, இந்த மாறி சமயத்துக்குன்னு தான் இருக்கவே இருக்கு...கண்ட நாள் முதல் படம், அது போடுங்க ன்னு ரெண்டு பெரும் உக்காந்துடுவோம். இப்டி அடிக்கடி உக்காந்தே பத்து பதினஞ்சு தடவ அந்த படத்த பாத்துட்டோம். நாங்க ரொம்ப ரொம்ப ரசிச்சு பாத்த 'light romantic comedy' அது.....கண்ட நாள் முதலாய் னு யுவனோட title song ல ஆரம்பிச்சு கிளைமாக்ஸ் வரைக்கும் அலுக்காத ஒரு படம்.
இந்த பட டைரக்டர் ஓட next movie (கண்ணாமூச்சி ஏனடா) க்கும் இதே expectation ல உக்காந்து செம upset.

recent ஆ நான் பாத்து ரொம்ப excite ஆன ஒரு matter kangaroo. இது வரைக்கும் சினிமா ல தான் kangaroo பாத்து இருக்கேன். இப்போ one week ஆ பக்கத்துல உள்ள பார்க் ல summer க்காக ஒரு நாலஞ்சு kangaroo வந்துருக்கு....ரொம்ப soft ஆ இருக்கு....அழகா இருக்கு.....அதோட வயித்துக்குள்ள இருந்து zip தொறந்து வர்ற மாறி அதோட குட்டி எட்டி எட்டி பாக்குறது, அம்மா kangaroo குட்டி க்கு இலகுவா இருக்குறதுக்காக குனிஞ்சு புல்லு மேயுறதும் அப்போ அந்த குட்டி யும் தலைய நீட்டி புல்லு மேயுறதும் சாப்பிட்டு முடிச்சோன அம்மா வயிற்று பைக்குள்ள போயிடுச்சுன்னா அதுக்கு அப்றோம் அங்க ஒரு பை யோ இல்ல அதுக்குள்ள ஒரு குட்டியோ இருக்குறதுக்கான அடையாளமே தெரியாம போயடுறதும், அம்மா kangaroo ரெண்டு காலால தாவி தாவி மனுஷன் நடக்குறது மாறி போறதும் நாள் முழுக்க பாத்துட்டே இருக்கலாம்.....ஆனா ஒண்ணு....நான் அர்ஜுன் ஐ pram ல கூட்டிட்டு போவேன் ல.....'நான் லாம் என் குட்டி ய மடிலையே தூக்கிட்டு அலையுறேன், உனக்கு pram வேண்டி கெடக்கு....?' அப்டின்னு என்னை கேவலமா பாக்கும் அந்த kangaroo....


என் பையன் கத்த ஆரம்புசுட்டான்...இவ்ளோ நேரம் என்னை கம்ப்யூட்டர் ல உக்கார விட்டதுக்கே அவனுக்கு பெரிய தேங்க்ஸ் சொல்லணும்....

2 comments:

Unknown said...

nice to read ...
Ennayum madhikka oru jeevan irukke...
Ena veetla en pullayum seri, avarum seri, enna madhikradhe illa......

Unknown said...

Hey u
Nice and cool blog!!!
enakum Kanda naal mudhal padam romba pudikum..I feel like watching it again after reading your blog.Appuram unga "Blessed with" blog eppo vara podhu..I am looking forward to read that one.Post it when you get a chance.